காஷ்மீரில் கோர விபத்து; 16 பேர் உயிரிழப்பு!

Published:

kashmir accident - 2026

ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து.. 16 பேர் மரணம்.!

நவம்பர் 12 நேற்று மதியம் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 17 பேர் கொண்ட பயணிகள் வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 16 பேர் மரணமடைந்தனர்.

‘கோவா கிராமம்’ திருப்பத்தில் டிரைவர் வாகனத்தை கட்டுப் படுத்த இயலாமல் போனார். இதை அடுத்து, அந்த வாகனம் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது .

சம்பவம் நடந்த இடத்திலேயே 12 பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபின் இறந்தனர். ஒருவரின் உயிர் ஊசலாடுகிறது.

இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். மூன்று குழந்தைகள். விபத்து பற்றி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img