பாட்னா: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். முன்னதாக, துணை முதலமைச்சர் பதவி தந்தால் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலக தயார் என்று ஜிதன் ராம் மாஞ்சி கூறினாராம். இந்நிலையில், உட்கட்சி மோதல் வலுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில், பீகார் முதலமைச்சராக உள்ள ஜிதன் ராம் மாஞ்சி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிதிஷ் குமார் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பீகார் சட்டப்பேரவையில் தனக்கு 130 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளத் நிதிஷ்குமார், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை இன்று சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை அளிக்கவுள்ளார். இதனை அக்கட்சியின் கே.சி.தியாகி தெரிவித்தார். ஆளுநரை சந்தித்து, புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தியாகி தெரிவித்துள்ளார்.
பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
Popular Categories


