சோ நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர்

Published:

சென்னை:

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பி வந்தார் சோ.

கடந்த ஆகஸ்ட் மாதம்  பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போதும் சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.

பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சோவை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில் ஓரளவு உடல் நலம் தேறி வீடு திரும்பிய சோ ராமசாமிக்கு மீண்டும் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.  இந்நிலையில் சோ நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குடும்ப மருத்துவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img