தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆனி விஜயா, போதைப்பொருள் புலனாய்வுத்துறை எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே எஸ்.பி-யாக சரோஜ்குமார் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.