பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுதில்லி:

தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் மற்றும் ஜி.எஸ்.மணி ஆகியோர், ‘சட்ட மன்றத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால் அவையில் நடக்கும் விவாதங்கள் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு அனுகூலமானவை மட்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படுகிறது. இது சட்ட விரோதமானதும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும் ’ என்று கூறினர்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நீங்கள் ஏன் இதனை தனியாக பொதுநல வழக்காக தாக்கல் செய்யக்கூடாது’ என்று கேள்வி எழுப்பினர். இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் நீதிமன்றம் அனுமதித்தால் இந்த மேல்முறையீட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பொதுநல மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், உயர் நீதிமன்றம் அதை விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் விஜயகாந்தின் மேல்முறையீட்டு மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி டி.ஜெகதீஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ல் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆனால் நேரடி ஒளிபரப்பு  செய்ய நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு பதில் அளித்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, விஜயகாந்த் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அரசின் நிதிநிலை சரியில்லை என்றால், தனக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலில் இலவசமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆதாயத்துக்காக இந்த மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறி, விஜயகாந்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், மனுதாரர் (விஜயகாந்த்), தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பதிவுபெற்ற ஒரு கட்சியின் தலைவர் என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மேலும், சட்டமன்ற நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது அரசின் கடமை. எனவே, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து, மனுதாரரையும் அந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – என்று கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories