இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்

03 May27 french open - 2026பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இன்று தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக கடினமானதாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவிரெவ், குரோஷியாவின் மரின் சிலிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
களிமண் ஆடுகளத்தில் முடிசூடா மன்னனாக திகழும் ரபெல் நடால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பிரெஞ்ச் ஓபனில் இவர் 10 முறை சாம்பியன்பட்டம் வென்றுள்ளார்.

ஒரே கிராண்ட் ஸ்லாமில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். எனவே, 11வது முறையாக நடால் சாம்பியன் ஆவார் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடால் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவருக்கு கடும் போட்டி அளிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே இருவரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை. இப்போதைக்கு நடாலுக்கு போட்டியாளர்களாக ஜிவிரெவ், சிலிச் போன்றவர்களே கருதப்படுகின்றனர். ஜோகோவிச் பார்மில் இல்லாததால் நடாலை வீழ்த்தும் வாய்ப்புகள் குறைவே. எனவே, நடால் 11வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மகளிர் ஒற்றையர் பிரிவை பொறுத்த வரையில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் நடப்பு சாம்பியன் லாட்வியாவின் ஒஸ்டாபென்கோ, நம்பர்-1 வீராங்கனை ரோமானியாவின் ஹாலேப், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, ஸ்பெயினின் முகுருசா, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா என நட்சத்திர பட்டாளமே களமிறங்குகிறது.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

இவர்களுக்கு மத்தியில், குழந்தை பெற்ற பிறகு ஓராண்டு இடைவெளிக்கு பின் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் களமிறங்குகிறார். ரேங்கிங்கில் 453வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள செரீனா கடந்த ஓராண்டில் 2 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இளம் வீராங்கனைகளுக்கு அவரால் எந்த அளவுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. முதல் சுற்றிலேயே செரீனா, 70வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கிறிஸ்டியானா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். 4வது சுற்றில் ரஷ்யாவின் மரிய ஷரபோவாவை சந்திக்க வேண்டும். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா, 3 முறை பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories