December 5, 2025, 8:45 PM
26.7 C
Chennai

இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்

03 May27 french open - 2025பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இன்று தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக கடினமானதாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவிரெவ், குரோஷியாவின் மரின் சிலிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
களிமண் ஆடுகளத்தில் முடிசூடா மன்னனாக திகழும் ரபெல் நடால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பிரெஞ்ச் ஓபனில் இவர் 10 முறை சாம்பியன்பட்டம் வென்றுள்ளார்.

ஒரே கிராண்ட் ஸ்லாமில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். எனவே, 11வது முறையாக நடால் சாம்பியன் ஆவார் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடால் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவருக்கு கடும் போட்டி அளிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே இருவரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை. இப்போதைக்கு நடாலுக்கு போட்டியாளர்களாக ஜிவிரெவ், சிலிச் போன்றவர்களே கருதப்படுகின்றனர். ஜோகோவிச் பார்மில் இல்லாததால் நடாலை வீழ்த்தும் வாய்ப்புகள் குறைவே. எனவே, நடால் 11வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மகளிர் ஒற்றையர் பிரிவை பொறுத்த வரையில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் நடப்பு சாம்பியன் லாட்வியாவின் ஒஸ்டாபென்கோ, நம்பர்-1 வீராங்கனை ரோமானியாவின் ஹாலேப், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, ஸ்பெயினின் முகுருசா, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா என நட்சத்திர பட்டாளமே களமிறங்குகிறது.

இவர்களுக்கு மத்தியில், குழந்தை பெற்ற பிறகு ஓராண்டு இடைவெளிக்கு பின் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் களமிறங்குகிறார். ரேங்கிங்கில் 453வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள செரீனா கடந்த ஓராண்டில் 2 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இளம் வீராங்கனைகளுக்கு அவரால் எந்த அளவுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. முதல் சுற்றிலேயே செரீனா, 70வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கிறிஸ்டியானா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். 4வது சுற்றில் ரஷ்யாவின் மரிய ஷரபோவாவை சந்திக்க வேண்டும். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா, 3 முறை பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories