தீபாவளிக்கு தமிழக அரசு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு !

Published:

தமிழகத்தில் தீபாவளிக்கு அரசு நிறுவனமான டாஸ்மாக் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 மதுக்கூடங்களும் (பார்) செயல்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 500 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடுமுறை நாட்களில் ரூ.92 கோடி என்ற அளவிலும்,
நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி அளவிலும், சராசரியாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. எப்போதும் பண்டிகை காலங்களில் மேலும் சில மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது.

மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டதால், மதுபான விலை உயர்ந்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்ய கடை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ”கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.230 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தீபாவளியையொட்டி 3 நாள்களுக்கு ரூ.303 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டு தீபாவளி சீசனில் மது விற்பனை அதிகரித்தாலும், விலை உயர்வை வைத்து ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்க வேண்டும். இந்த நிலையில்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

ஆனால் ரூ.8 கோடி குறைந்து ரூ.142 கோடிக்கு மட்டுமே விற்பனையானது. அதேபோன்று இந்த ஆண்டும் நடந்துவிட கூடாது என்பதால், மண்டல அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த ஆண்டைவிட 20 முதல் 25 சதவீதம் அதாவது சராசரியாக ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் கூடுதலாகவே மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வெயில் காலங்களில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் ‘பீர்’ வகைகள் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. இதன் விற்பனையையும் தீபாவளி நாட்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில்கேட்ட மதுபானம் கிடைப்பதில்லை, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று குடி மகன்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற புகார்களுக்கு, தாலுக்கா வாரியாக தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர் டாஸ்மாக் அதிகாரிகள்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற பிரசாரம் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிலையில், தீபாவளிக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img