தீபாவளிக்கு தமிழக அரசு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு !

தமிழகத்தில் தீபாவளிக்கு அரசு நிறுவனமான டாஸ்மாக் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 மதுக்கூடங்களும் (பார்) செயல்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 500 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடுமுறை நாட்களில் ரூ.92 கோடி என்ற அளவிலும்,
நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி அளவிலும், சராசரியாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. எப்போதும் பண்டிகை காலங்களில் மேலும் சில மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது.

மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டதால், மதுபான விலை உயர்ந்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்ய கடை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ”கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.230 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தீபாவளியையொட்டி 3 நாள்களுக்கு ரூ.303 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டு தீபாவளி சீசனில் மது விற்பனை அதிகரித்தாலும், விலை உயர்வை வைத்து ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்க வேண்டும். இந்த நிலையில்

ஆனால் ரூ.8 கோடி குறைந்து ரூ.142 கோடிக்கு மட்டுமே விற்பனையானது. அதேபோன்று இந்த ஆண்டும் நடந்துவிட கூடாது என்பதால், மண்டல அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த ஆண்டைவிட 20 முதல் 25 சதவீதம் அதாவது சராசரியாக ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் கூடுதலாகவே மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வெயில் காலங்களில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் ‘பீர்’ வகைகள் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. இதன் விற்பனையையும் தீபாவளி நாட்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில்கேட்ட மதுபானம் கிடைப்பதில்லை, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று குடி மகன்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற புகார்களுக்கு, தாலுக்கா வாரியாக தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர் டாஸ்மாக் அதிகாரிகள்.

தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற பிரசாரம் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிலையில், தீபாவளிக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories