கொலை வழக்குகளில் துப்புதுலக்க தனிப்படைகள் : நெல்லை டிஐஜி அன்பு

Published:

கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற அன்பு தெரிவித்துள்ளார்.
 
நெல்லை சரக டிஐஜியாக இருந்த முருகன் பதவி உயர்வு பெற்று மதுரை தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பியாக இருந்த அன்பு நெல்லை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். அவர் இன்று டிஐஜியாக பொறுப்பேற்றார். அதோடு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். டிஐஜியாக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும். 
 
சைபர் கிரைம் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க சிபிசிஐடியில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு உள்ளூர் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும்.  நெல்லை சரகத்தில் நடைபெறும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.
ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img