​25 ஆண்டுகளை நிறைவு செய்த திரைப்படம்

02 June11 Jurassic Park - 2026கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் அந்த படத்தின் காட்சிகளை நினைவு கூரும் ஒரு சிறப்பு செய்தி…

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட டைனோசர்களை கண்முண்ணே கொண்டு வந்து நிறுத்தினார் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க். பிரபல எழுத்தாளர் மைக்கெல் க்ரைட்டன் 1990ல் எழுதிய ஜுராஸிக் பார்க் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. 1993ம் ஆண்டு வெளியான இந்த படம் குவித்த தொகை 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு மேல்.

இப்போது உள்ள விலைவாசியுடன் ஒப்பிட்டால் உலகிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெயரை பெற்றிருக்கும் . 90களில் படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு பொக்கிஷம். அவர்கள் காலம் முடியும் வரை நினைவில் இருக்ககூடிய கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கொண்டாடிய ஜுராசிக் பார்க் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் உள்ள ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் இடம்பெற்றது என்னவோ 15 நிமிடங்கள் மட்டுமே. அந்த பதினைந்து நிமிடங்கள் ஏறபடுத்திய தாக்கம் சினிமா உலகில் மறக்க முடியாதது.

இதில் டைனோசர்களை தத்ரூபமாக காட்ட பயன்படுத்தப்பட்ட SPECIAL EFFECTS , இன்றும் ஹாலிவுட் திரைப்பட ஜாம்பவான்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத திரைக்கதை, ஒரு காட்சி கூட BORE அடிக்காமல் பார்த்து கொண்ட ஸ்பீல் பெர்கின் இயக்கம் என சினிமா உலகின் பொக்கிஷமாக இருக்கிறது ஜுராசிக் பார்க் திரைப்படம். ஹாலிவுட் படங்களை உலகின் எல்லா நாடுகளுக்கும் கொண்டு சேர்த்த கதவினை ஜூராசிக் பார்க்கின் டைனோசர்கள் திறந்து வைத்தன.

இந்த படம் கொடுத்த இமாலய வெற்றியை தொடர்ந்து தான் ஹாலிவுட்டில் GRAPHICS, SPECIAL EFFECTS போன்ற தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஜூராசிக் பார்க் படம் குவித்த வசூலை தொடர்ந்து டைனோசர்களை மையமாக கொண்டு நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை அவை குவித்த வசூல் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

ஆன் ஸ்கிரினில் டைனோசரின் மிரட்டல்களை கண்டு வாயடைத்து போகும் ரசிகர்கள் இருக்கும் வரையில் தங்க முட்டை இடும் இந்த ஜுராசிக் பார்க் FRANCHISE இன்னும் கோடிகளை குவித்து கொண்டே இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories