​25 ஆண்டுகளை நிறைவு செய்த திரைப்படம்

02 June11 Jurassic Park - 2026கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் அந்த படத்தின் காட்சிகளை நினைவு கூரும் ஒரு சிறப்பு செய்தி…

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட டைனோசர்களை கண்முண்ணே கொண்டு வந்து நிறுத்தினார் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க். பிரபல எழுத்தாளர் மைக்கெல் க்ரைட்டன் 1990ல் எழுதிய ஜுராஸிக் பார்க் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. 1993ம் ஆண்டு வெளியான இந்த படம் குவித்த தொகை 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு மேல்.

இப்போது உள்ள விலைவாசியுடன் ஒப்பிட்டால் உலகிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெயரை பெற்றிருக்கும் . 90களில் படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு பொக்கிஷம். அவர்கள் காலம் முடியும் வரை நினைவில் இருக்ககூடிய கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கொண்டாடிய ஜுராசிக் பார்க் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் உள்ள ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் இடம்பெற்றது என்னவோ 15 நிமிடங்கள் மட்டுமே. அந்த பதினைந்து நிமிடங்கள் ஏறபடுத்திய தாக்கம் சினிமா உலகில் மறக்க முடியாதது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதில் டைனோசர்களை தத்ரூபமாக காட்ட பயன்படுத்தப்பட்ட SPECIAL EFFECTS , இன்றும் ஹாலிவுட் திரைப்பட ஜாம்பவான்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத திரைக்கதை, ஒரு காட்சி கூட BORE அடிக்காமல் பார்த்து கொண்ட ஸ்பீல் பெர்கின் இயக்கம் என சினிமா உலகின் பொக்கிஷமாக இருக்கிறது ஜுராசிக் பார்க் திரைப்படம். ஹாலிவுட் படங்களை உலகின் எல்லா நாடுகளுக்கும் கொண்டு சேர்த்த கதவினை ஜூராசிக் பார்க்கின் டைனோசர்கள் திறந்து வைத்தன.

இந்த படம் கொடுத்த இமாலய வெற்றியை தொடர்ந்து தான் ஹாலிவுட்டில் GRAPHICS, SPECIAL EFFECTS போன்ற தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஜூராசிக் பார்க் படம் குவித்த வசூலை தொடர்ந்து டைனோசர்களை மையமாக கொண்டு நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை அவை குவித்த வசூல் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

ஆன் ஸ்கிரினில் டைனோசரின் மிரட்டல்களை கண்டு வாயடைத்து போகும் ரசிகர்கள் இருக்கும் வரையில் தங்க முட்டை இடும் இந்த ஜுராசிக் பார்க் FRANCHISE இன்னும் கோடிகளை குவித்து கொண்டே இருக்கும்

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories