தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை முகனூலில் அவதூறாக சித்திரித்து புகைப்படத்தை வெளியிட்டதாக கூறி நீலகிரியைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீஸார் 13-11-2015 நேற்று கைது செய்தனர்.
உதகையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீதர். இவர், உதகை ஸ்ரீதர் என்ற பெயரில் முகனூல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளார். ஸ்ரீதர் கடந்த 10-ஆம் தேதி தனது முகனூல் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சித்திரித்து புகைப்படம் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, உதகை நகர அதிமுக செயலாளர் டி.கே.தேவராஜ் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீதர் மீது அவதூறு, பெண்களை இழிவுபடுத்துதல், வன்கொடுமை உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீதரை உதகை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீதரை, உதகை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் ஸ்ரீதர் பார் கவுன்சிலில் உறுப்பினர் இல்லையென்றும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


