ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் : சுனாமி தாக்கியது

Published:

தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது.

தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.

நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சிறிது நேரத்தில் அங்கு சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம், உயிர்சேதம் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். புகுஷிமா அணு உலை வெடித்து கதிரியக்கம் வெளியானது என்பது குறிப்பிட தக்கது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img