மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்!

Published:

edappadi palanisamy - 2026

சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில அணைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது, மாநில அரசின் உரிமைகள் இந்த சட்டம் மூலம் பறிக்கப்படுவதாகவும், இந்த மசோதாவை சட்டமாக்குவதை உடனே மத்திய அரசு நிறுத்த வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இந்தத் தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img