பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில் முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை வாக்கிய சுலோக குறிப்புகளாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.
முன்னோர்கள் கண்டறிந்த பஞ்சாங்கத்தில் தமிழகத்தில் பெய்த மழையையை பற்றியும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புயல்கள் பற்றிய பகீர் தகவல்கள் அடங்கியுள்ளதாக செய்தி வாட்ஸப்பில் வைரலாக பரவி வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்களின் அடிப்படையில் எழுதப்படுவதுவாக்கிய பஞ்சாங்கத்தில், அக்டோபர் 14 ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-11-2015 சனிக்கிழைமை அன்று மழை தொடங்கி ஒரு வாரம் பெய்யும் எனவும்,22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு புயல் பலமாக சென்னையை தாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் பலமாக சென்னையை தாக்குமா ? பஞ்சாங்கம் சொல்லும் புயல் தாக்க செய்தி உண்மையா ? அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.


