தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும்,தமிழகத்தில் பெரும் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ரமணன் செய்தியாளர்களிடம் கூறியு ள்ளார்.


