இன்று முதல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஆளுநர் தொடக்கி வைக்கிறார்

17 June28 Book show - 2026என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 21-ஆவது புத்தகக் கண்காட்சி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இன்று தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.

என்எல்சி இந்தியா நிறுவனம் வளமான தேசத்தை உருவாக்க மின் ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாக நெய்வேலியில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 21-ஆவது புத்தகக் கண்காட்சி நெய்வேலி, வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் சுமார் 150 பதிப்பாளர்கள் பங்கேற்று, 160 விற்பனைக் கூடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர்.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வருகிற 29-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா மற்றும் இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் மத்திய, மாநில அரசுகளின் முக்கியப் பிரமுகர்கள் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, விழுப்புரம் சரக காவல் துறை டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், திரைப்படத் தொகுப்பாளர் பி.லெனின், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories