பாரீஸில் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடை பெற்று ற்றுவருவதாக தெரிகிறது. இதில் போலீஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது.
பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளைப் பிடிக்க செயின்ட் டெனிஸ் பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் காவல் துறையின குவிந்துள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த காவல் துறை ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 15-ம் தேதி பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.
பாரீஸில் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா – இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. பாரீஸ் தாக்குதலை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பிரிவு தலைமையேற்று நடத்தியுள்ளது.
அந்த நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல் பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெல்ஜியத்தில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உள்ளார்.
சிரியாவில் உள்ள முகாமில் அவரது தலைமையில்தான் பாரீஸ் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 27 வயதாகும் அவரைப் பிடிக்க பிரான்ஸ் உளவுத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், அப்துல் ஹமீது செயின்ட் டெனிஸ் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


