தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி செய்யவும், நிவாரண நிதி வழங்கவும் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம்கூறியுள்ளார்.


