சென்னை, தேமுதிக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேற்று திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அண்மையில், திடீர் தீவிர அரசியல் ஆர்வம் காட்டி, மேகதாது அணை விவகாரம் உள்பட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். இதனால் அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இருப்பினும் அதை மறுத்த விஜயகாந்த், பின்னர், பாஜக சார்பில் தன்னையே முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப் பட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றுள்ளார். தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், தீவிர அரசியலில் களம் இறங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதனால், அதுகுறித்து ஆலோசிக்கவும், கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்கவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் அதற்கான முன் ஏற்பாடுக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.
சிங்கப்பூருக்கு விஜயகாந்த் திடீர் பயணம்: தீவிர அரசியலுக்கு திட்டம்?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari