பேருந்துக்கு நடத்துனர்கள் ஏன் தேவை தெரியுமா? ராமதாஸ் சொல்லும் ரகசியம்!

Published:

07 June18 Ramadoss - 2026

சென்னை: பேருந்துகளில் நடத்துனர்கள் ஏன் தேவைப் படுகிறார்கள் தெரியுமா? இதற்கான ரகசியத்தை பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சில வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்து இயக்கத்தை அரசு தொடங்கி வைத்துள்ளது. இதன்படி, பாயிண்ட் டூ பாயிண்ட்டாக பேருந்துகள் இயக்கப்படும். ஓட்டுநர் மட்டுமே கொண்ட பேருந்து என்பதால், வழியில் பயணச் சீட்டு வாங்க இயலாது.  இதனை தனது டிவிட்டர் பதிவில் கிண்டல் செய்திருக்கிறார் ராமதாஸ். வண்டி பாதிவழியில் முரண்டு பிடித்தால் இறங்கித் தள்ள ஆள் வேண்டுமே என்று கேட்டு, நடத்துனரின் பணி தள்ளிவிடுவதுதான் என்று பளிசெனக் கூறியுள்ளார்.

அவரது டிவிட்டர் கருத்து…தமிழகம் முழுவதும் 28 வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்: செய்தி – அனைத்தும் புதிய பேருந்துகளாம். அய்யோ பாவம் ஓட்டுனர்கள். பாதி வழியில் நின்றால் கூட இறங்கி தள்ள ஆள் இருக்க மாட்டார்களே!

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img