இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை: சொல்லிக் கொடுத்தபடி ‘கள்ள மௌனம்’ காத்த கார்த்தி !

மும்பை:

சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று மும்பை பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி முன்னிலையில் வைத்து விசாரிக்கப் பட்டார். ஆனால் அவர், தந்தை சொல்லிக் கொடுத்தபடி கள்ள மௌனம் காத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்றுத் தருவதில் கார்த்தி சிதம்பரம் இடைத் தரகராக செயல்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பயன் அடைந்தார் என்றும், இதற்காக தந்தையின் நிதியமைச்சர் என்ற பதவியை தவறாகப் பயன்படுத்தினார் ஏன்பதும்தான் கார்த்தியின் மீதுள்ள குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடந்த பிப். 28ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் சென்னையில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தற்போது கார்த்தி சிதம்பரம் சிபிஐ., அதிகாரிகளின் விசாரணைக் காவலில் இருக்கிறார். அவரை மும்பை சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கார்த்தி மும்பைக்கு அழைத்து வரப் பட்டார். கொலை வழக்கில் பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் தனித்தனியே விசாரிக்கப்பட்டார்.

s - 2026

மும்பை பைகுல்லா சிறையில் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து கார்த்தி சிதம்பரத்திடம் மாலை வரை விசாரணை நடத்தினர் அதிகாரிகள். தொடர்ந்துன் கார்த்தியிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றதாகவும், ஆனால் சி.பி.ஐ.யின் பல கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஆனால், விசாரணை முடிந்து வெளியில் வந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது என்றும், அரசியல் நோக்கத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தன் தந்தையார் சொல்லிக் கொடுத்தபடியே கூறிச் சென்றாராம்.

முன்னதாக, இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருக்கும் அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி 10 லட்சம் பெற்றதாகவும் சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் குறிப்பிடத் தகுந்த ஆதாரம் கிடைத்ததை அடுத்தே லண்டனிலிருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், சிபிஐ சிறப்பு பொருளாதாரப் பிரிவு அதிகாரிகளால் பிப்.28 அன்று கைது செய்யப் பட்டார்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

chidambaram karthi - 2026

கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க 15 நாள் காவல் கோரியது சிபிஐ., ஆனால், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், கார்த்தி சிதம்பரம், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல், கள்ள மௌனம் காத்து வருகிறார் என்று கூறப் படுகிறது. நீதிமன்றத்திலேயே வைத்து, ப.சிதம்பரம் தன் மகனிடம் நான் இருக்கிறேன், தைரியமாக இரு என்று மேலும் ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்று கூறப் படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தன் மகனின் தொழிலுக்கு உதவுமாறு சொல்லித்தான் தாங்கள் இந்த முறைகேட்டில் இறங்கியதாக இந்திராணி கூறியிருக்கிறாராம். எனவே ப.சிதம்பரம் அனைத்து வழிகளிலும் தனது மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிடுவார் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் தில்லியில் இருந்து மும்பைக்கு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர். இது குறித்துக் கூறிய அதிகாரிகள், ”ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணியும் பீட்டரும் அன்னிய முதலீடு தொடர்பாக அரசு ஒப்புதல் பெறுவது குறித்து 2007ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நார்த் பிளாக் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது மகனின் தொழிலுக்கு உதவுமாறு கோரியுள்ளார். அதன்படி, கார்த்தி சிதம்பரத்தை இருவரும் சந்தித்துப் பேசியபோது, அவர் 10 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கேட்டதாக இந்திராணி முகர்ஜி மாஜிஸ்திரேட் முன் கடந்த மாதம் 28ஆம் தேதி அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுக்குப் பின் பேரம் படிந்து, 7 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவேதான் மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் தனித்தியாக நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி விசாரிக்க முடிவு செய்தோம்” என்றனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இருப்பினும், சிபிஐ நீதிமன்றம் கொடுத்த 5 நாள் அவகாசத்துக்குள் கார்த்தியிடம் என்ன விசாரிக்க முடியும் என்று கையைப் பிசைகின்றனர் அதிகாரிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories