February 22, 2026, 2:48 PM
30.4 C
Chennai

டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிடுமே! : திண்டுக்கல் சீனிவாசன் கவலை!

திண்டுக்கல்:

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர்ப்பலிகள் ஏற்படுமே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில், டாஸ்மாக் மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் எனும் பிரிவில் வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தியே வருகிறார்கள்.

அரசு டாஸ்மாக் மூலமான வரி வருவாய், விற்பனை வருவாயை கணக்கில் கொண்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியவர்களை கருணையற்ற முறையில் போலீஸாரைக் கொண்டு அடக்கி ஒடுக்கினார். இந்நிலையில் இந்த அரசும் அதற்கு ஆதரவாகவே உள்ளது என்பது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் 114 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துப் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் பேசியது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ. 250 கோடி மானியத்தில் 1 லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 3,090 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 114 பேருக்கு இந்த ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.. என்று பேசினார்.

அப்போதுதான், டாஸ்மாக் கடைகள் குறித்தும் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவர் பேசியதில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் விற்பனை அதிகரித்துவிடும். கள்ளச்சாராயத்தைக் குடித்து அவனவன் செத்து விடுவான். அதனால் உயிரிழப்புகள்தான் ஏற்படும். எனவே உயிரிழப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என புரட்சித் தலைவர் பாடியுள்ளார். குடிப்பவன் தானாகவே திருந்தினால்தான் இது முடிவுக்கு வரும்” என்றார். அவரது பேச்சு இப்போது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories