December 16, 2025, 4:12 PM
26.8 C
Chennai

டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிடுமே! : திண்டுக்கல் சீனிவாசன் கவலை!

திண்டுக்கல்:

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர்ப்பலிகள் ஏற்படுமே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில், டாஸ்மாக் மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் எனும் பிரிவில் வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தியே வருகிறார்கள்.

அரசு டாஸ்மாக் மூலமான வரி வருவாய், விற்பனை வருவாயை கணக்கில் கொண்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியவர்களை கருணையற்ற முறையில் போலீஸாரைக் கொண்டு அடக்கி ஒடுக்கினார். இந்நிலையில் இந்த அரசும் அதற்கு ஆதரவாகவே உள்ளது என்பது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் 114 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துப் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் பேசியது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ. 250 கோடி மானியத்தில் 1 லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 3,090 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 114 பேருக்கு இந்த ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.. என்று பேசினார்.

அப்போதுதான், டாஸ்மாக் கடைகள் குறித்தும் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவர் பேசியதில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் விற்பனை அதிகரித்துவிடும். கள்ளச்சாராயத்தைக் குடித்து அவனவன் செத்து விடுவான். அதனால் உயிரிழப்புகள்தான் ஏற்படும். எனவே உயிரிழப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என புரட்சித் தலைவர் பாடியுள்ளார். குடிப்பவன் தானாகவே திருந்தினால்தான் இது முடிவுக்கு வரும்” என்றார். அவரது பேச்சு இப்போது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

Entertainment News

Popular Categories