December 6, 2025, 9:16 AM
26.8 C
Chennai

சகோதரத்துவ நல்லிணக்கம் பேணும் ரக்ஷா பந்தன் விழா

sengottai rss program - 2025
#image_title

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை மாலை 7:30 க்கு அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற காவல்துறை ஆய்வாளர் சுப்பையா தலைமையேற்று நடத்தினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ்., மாவட்டத் தலைவர் எஸ் குருமூர்த்தி, குமரி கோட்டத் தலைவர் ஏ. காமராஜ் ஆகியோர் கலந்துகொள்ள, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பி தங்கராஜ் சிறப்புரையாற்றினார். 

பி.தங்கராஜ் தமது சிறப்புரையில், ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப் படுகிறது என்பதையும், சங்கத்தின் வார்தா முகாமில் காந்திஜி வந்து பார்த்துக் கூறிய கருத்தையும் பற்றிச் சொல்லி, வரலாற்றில் ரக்ஷா பந்தன் நிகழ்வுகள் எப்படி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தின, உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சமாக அது எவ்வாறு திகழ்ந்தது, எனவே, நம்மிடையே சகோதரத்துவம் வலுவாக வேண்டிது ஏன் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். 

செங்கோட்டை நகரின் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சமுதாய நல்லிணக்கப் பேரவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் ராக்கி கயிறு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்தவர்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.

அனைத்து சமுதாயத் தலைவர்களையும் மேடையேற்றி, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்., பொறுப்பாளர்கள் கௌரவம் செய்தார்கள். குழுப்பாடல் உடன் தொடங்கிய நிகழ்ச்சி, சங்க  பிரார்த்தனாவுடன் நிறைவு பெற்றது. 

நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு, தென்காசி  மாவட்ட சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர் ஜி.வரதராஜன் ஒருங்கிணைக்க, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அமர வைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், சகோதரத்துவ சிந்தனை குறித்தும் பேசினார்கள். 

செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., நகரச் செயலாளர் அயோத்யா முருகேசன்  நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன்னின்று செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுகும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories