December 5, 2025, 6:49 PM
26.7 C
Chennai

இதயம் ஒரேயடியாக ஓய்வடைவதைத் தவிர்க்க… அவ்வப்போது ஓய்வு தேவை!

heart attack - 2025

கவனித்திருக்கலாம்…  நடுத்தர வர்க்கத்தில், மாரடைப்பு வந்த ஆண்களை!

அப்பொழுது தான் மகள் மகனை செட்டில் பண்ணியிருப்பார். இருபத்திச் சொச்ச வயதிலிருந்து, குடும்பச் சுமைக்கு முட்டுக் கொடுக்க உழைக்க ஆரம்பித்து, தன் கல்யாணத்து கௌரவச் செலவில் சிக்கி, புது மனைவிக்கு படோடோபம் காட்ட கூடுதலாக உழைத்து, பெற்ற பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, தன் வலி அவர்களுக்குத் தெரிய விடாது உழைத்து, மகள்களைக் கட்டிக் கொடுத்து, மகன் தலையெடுத்து விட்டான் என்று தெரிந்த கணத்தில், உஸ்ஸ்ஸ் அப்ப்பா என்று உட்காரலாம் என்று உடம்பு ஏங்க, ஐயோ தன் மகன் மட்டும் தனியாகக் கஷ்டப்படுகிறானே என்று மனசு கேட்காததால், தன் நெடிய உழைப்பை நிறுத்தாமல் தொடரும் தருணத்தில் தான், அந்த மாரடைப்பு வரும். அல்லது ஒரு விபத்து நேர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்கு வேலைக்குப் போகக் கூடாது என்று டாக்டர் அறிவுறுத்துவார்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது, வயசாயிடுச்சு, அதனால் உடம்பு கெட்டுடுச்சு என்று தோன்றும். ஆனால், நிஜம் என்னவென்றால், மனசுக்கு ஓய்வு தேவை என்று தோன்றும் போது, அவசியம் ஓய்வு எடுத்திடணும். இல்லாவிட்டால் அதற்கான சூழலை உருவாக்கி அதற்குத் தேவையான ஓய்வை அதுவே எடுத்துக் கொள்ளும். மனம் அத்தனை வலிமையானது.

விடாது அடம் பிடிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு ஓரிரு நாட்கள் லீவ் போட்டு விளையாட விடுங்கள். இல்லாவிட்டால், காய்ச்சலோ, விளையாடும் போது அடிபட்டோ ஓய்வெடுக்க வேண்டிவரும்.

இன்று, நாற்பது வயதில் ஒரு நண்பருக்கு மரணம். நிச்சியம் இறக்கும் வயதில்லை. உற்சாகமான மனமும் உறுதியான உடல்வாகும் உடையவராகத் தான் தோற்றம் கொண்டவர். ஆனால், ஏன் இந்த மரணம்?

மன உளைச்சலோ, உடல் உபாதைகளோ, பொருளாதார, குடும்பச் சிக்கலோ இருந்தால், பிரச்சினைகளைக் கடக்க, போதுமான ஓய்வெடுங்கள். சில நாட்களோ வாரங்களோஉங்கள் உழைப்பையும் முனைப்பையும் தள்ளி வைத்து, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களில் மட்டும்…ஆம் அதில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த தருணத்தில் இழக்கப் போகும் நாட்களைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, வாழ்வைப் பாதியிலேயே முடித்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் உயிர் என்பது, உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளின் வாழ்வாதாரம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories