மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் யாகபூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடாகி காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்துள்ளனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari