தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி: மதுரையில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

edappadi palanisamy - 2026அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார்.

அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள இந்த சைக்கிள் பேரணி, மதுரை மாவட்டத்தின் 10 பேரவைத் தொகுதிகளிலும் 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. பேரணியில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு மதுரையில் நடைபெறும் விழாவின்போது புதிய சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் வழங்கப்படும் தங்கத்தின் எடை 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டது, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கியது, ஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பூர்வ அனுமதி பெற்றது, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராத்து, காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு சாதகமான முடிவு கிடைத்தது, எய்ம்ஸ் மருத்துவமனை, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடத்தப்படும் சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் இன்று தொடங்கி வைக்கிறார்.

தினமும் 2 பேரவைத் தொகுதிகள் என 5 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பேரணி நடத்தப்படும். ஒவ்வொரு நாள் இரவும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மதுரையைத் தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இப்பேரணி நடத்தப்படும். மக்களவைத் தேர்தல் பணியின் தொடக்கமாகவே இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 100 பேர் வீதம் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories