மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.
கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ” ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.



