உத்தம வில்லனுக்கு தடை கோரி வி.எச்.பி., மனு

Published:

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு தடை கோரி போலீஸில் மனு அளித்துள்ளனர். இந்து மத உணர்வுகளை ‘உத்தம வில்லன்’ திரைப்படம் புண்படுத்துவதாக அந்த அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒருங்கிணைப்பாளர் கே.எல்.சத்யமூர்த்தி தலைமையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், திங்கள்கிழமை புகார் பதிவு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எச்.பி அமைப்பினர், ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரணியன் நாடகம் பாடலின் வரிகள் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தப் போவதாகவும் எச்சரித்தனர். லிங்குசாமியுடன் கமல் ஹாசன் தயாரித்து, திரைக்கதை எழுதியுள்ள இந்த ‘உத்தமவில்லன்’ படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படம் ஏப்ரல் மாத கடைசியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img