நட்சத்திர விடுதியில் பயங்கரவாத தாக்குதல் : 27 பேர் சுட்டுக்கொலை

Published:

ஆப்ரிக்க நாடான மாலி தலைநகர் பமாகோவில் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 30 பணியாளர்கள் உட்பட 170 பேரை சிறைபிடித்தனர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நட்சத்திர விடுதி பல மணி நேர சண்டைக்குப் பின் மீட்கப்பட்டது. சண்டையில், 27 பேர் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளில் 20 பேர் இந்தியர்கள். ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் விடுதியின் காவலர்களை சுட்டுக்கொன்ற பிறகு உள்ளே நுழைந்து அங்கு தங்கியிருந்தவர்களையும், பணியாளர்களையும் சிறைப் பிடித்தனர்.

அமெரிக்கா – பிரான்ஸ் கூட்டுப்படையினர், மாலி பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நட்சத்திர விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது. பல மணி நேர சண்டையில், 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நட்சத்திர விடுதியில் இருந்து 27 உடல்கள் மீட்கப்பட்டதாக மாலி அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல் கய்தாவுடன் தொடர்புடைய அல்-மொராபிடோன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மாலித் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, மாலியில் பத்து நாட்களுக்கு அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img