பூட்டை உடைக்கும் போராட்டம்… சமரசம் பேசிய அறநிலையத் துறை அதிகாரிகள்!

hm tvl thaipoosa mandapam2 - 2026

திருநெல்வேலி: தாமிரபரணியில் நெல்லை நகர்ப் பகுதியில் உள்ள முக்கியமான இரு படித்துறைகளில், புஷ்கர விழா நடத்துவதற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள், தைப்பூச மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு பூட்டினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று முன்னரே அறிவித்தபடி, பூட்டை உடைக்கும் போராட்டத்தை மேற்கொள்ள இந்துமுன்னணியினர் தைப்பூச மண்டபத்துக்கு வந்தனர். அவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் சமரசம் பேசினர்.

தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா வரும் அக்.,11 முதல் 23 வரையிலும் நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் விழா என்பதால் தாமிரபரணியில் நீராட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர்.

தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல், கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் பல்வேறு தீர்த்தங்களில் இதற்கான பணிகள் நடந்துவருகிறது. பல்வேறு குழுக்கள் படித்துறைகளை சீரமைத்து வருகின்றனர். அரசு சார்பில் நெல்லை ஆட்சியர் ஷில்பா தலைமையில் ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணிக்கரையில் உள்ள முக்கியமான அனைத்து கோயில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிக்கு செல்லும் பாதை போதுமான வசதிஇல்லை. அங்கு அதிகமான பக்தர்கள்கூடுவதற்கும் இடவசதியில்லை.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

பருவ மழை காலத்தில் தாமிரபரணியில் அதிக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பதும் சிரமம். நெரிசலான அங்கு புஷ்கர விழா நடத்த இயலாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தைப்பூச மண்டபம் பகுதியிலும் தாமிரபரணி ஆழமாக உள்ளது. அங்கு நீர்ச்சுழல் இருப்பதால் பலர் மூழ்கி இறந்துள்ளனர்.அங்கு நீராடுவதற்கு ஏற்ற இடம் இல்லை.

எனவே கலெக்டரின் உத்தரவின்படி கோயில் மண்டபங்கள், படித்துறைகளை புஷ்கர விழாவிற்கு வழங்கவேண்டாம் என கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மேலும் புஷ்கர விழாவிற்காக கோயிலில் இருந்து சுவாமியை எழுந்தருள செய்வது ஆகம விதிகளுக்கு மாறானதாகும் எனவும் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டாம் என அறநிலையத்துறை இணை ஆணையரின் சுற்றறிக்கை,  புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

hm tvl thaipoosa mandapam3 - 2026

இதனிடையே, அனைத்து படித்துறைகளும் அல்ல.. நெல்லை மாநகரத்தில் உள்ள இரு படித்துறைகளுக்கு மட்டுமே தடை என்று ஆட்சியர் அறிவித்தார். அதையே அறநிலையத்துறை அதிகாரிகளும் வழி மொழிந்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், தைப்பூச மண்டபத்துக்கு இரு தினங்களுக்கு முன்னர் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. இது, வழக்கமாக தாமிரபரணி ஆற்றில் நீராடச் செல்லும் அன்பர்களை கடும் கொதிப்புக்கு உள்ளாக்கியது. தைப்பூச மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு பூட்ட, இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய இந்து அமைப்பினர், பூட்டை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

இதன்படி, இன்று மாலை தைப்பூச மண்டபத்தில் பூட்டு போட்டு பூட்டிய அற நிலையத் துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து பூட்டை உடை போராட்டத்தை நடத்த வந்தனர் ஹிந்து முன்னணியினர். அவர்களிடம் தாசில்தார், காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தைப்பூச மண்டபத்தில் மஹா புஷ்கர விழா நடத்த உதவுவதாக சமரசம் பேசினர். இதை அடுத்து ஹிந்துமுன்னணியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories