முட்டை கொள்முதலில் ஊழல் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Published:

வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்ததாரர் ஒருவர் முட்டைக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முட்டை ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியுள்ளதாவது :-.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு உள் நோக்கத்தோடு உரிமம் வழங்கி இருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும் .

மேலும் ஒரு முட்டைக்கு 98 பைசாவில் இருந்து 1 ரூபாய் 75 காசுகள் வரை அதிக விலை கொடுத்ததால் பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் மனுவில்
கூறி இருந்தார் .

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,தமிழக அரசு 2 வார காலஅளவிற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு அரசின் தலைமைச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைககள் வளர்ச்சி திட்ட இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img