அதிமுக., அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை: தமிழிசை பெருமிதம்!

Published:

tamilisai soundarrajan - 2026

மதுரை: அதிமுக., அரசை திமுக., வால் அசைக்க முடியவில்லை என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,. அப்போது அவர், பெட்ரோல் -டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக., அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது.

அதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

வரும் திருமங்கலம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிடவே பாஜக., விரும்புகிறது.

இலங்கை இறுதிப் போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடியுள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img