வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தற்காலிக இடைநீக்கம்

Published:

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் அந்த பதவி மற்றும் தமிழகம் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவியில் இருந்தும் அதிரடியாக தற்காலிகமாக

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் கினி மானுவேல் தலைமையில் நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக் கூட்டத்தில் செல்வத்தை தற்காலிக இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை மற்றும், 42 வழக்கறிஞர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அகில வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து, வழக்கறிஞர்கள் மீதான தற்காலிக இடைநீக்க நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தவும் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் சங்கத்தின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது என தெரிகிறது .

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img