மாணவியை கும்பலாக மாணவர்கள் கற்பழித்து அந்த சம்பவத்தை காணொளியாக வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை

Published:

 
நான்கு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து பதினைந்து வயதான சக பள்ளி மாணவியை கற்பழித்து, அந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. ஒரு பள்ளி மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் படிப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, ஒரு மாணவரின் வீட்டிற்கு அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வர வைத்துள்ளனர்.
 
அந்த சிறுமி அங்கு சென்ற போது அந்த பெண்ணை வரவழைத்த மாணவனின் நண்பர்கள் மூன்று பேர் இருந்துள்ளன. அந்த மூன்று பேரும் சிறுமிடயுன் படிக்கும் சக மாணவர்கள்.அந்த நான்கு மாணவர்க சிறுமியை கொடூரமாக கற்பழித்து அதை கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
 
கற்பழிப்பு சம்பவத்தை யாரிடமாவது கூறினால், அந்த காணொளியை இணைய தளங்களில் போட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.சக மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்த அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.
 
இந்நிலையில் அவர்கள் எடுத்த காணொளியை கற்பழிப்பில் ஈடுபட்ட ஒரு மாணவன் அவ னது நண்பனுக்கு அனுப்பியுள்ளான். அப்படியே அந்த காணொளி வாட்ஸ் அப் மூலம் மும்பை முழுவதும் வைரலாக பரவியுள்ளது.
 
மேலும் அந்த காணொளி கற்பழிக்கப்பட்ட பெண்ணுடைய அத்தையின் கைப்பேசிக்கே வாட்ஸ் அப் மூலம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி அங்கு நடந்த விவரங்களை அவரிடம் தெரிவித்தார்
 
உடனடியாகஅந்த சிறுமியின் அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அந்த நான்கு மாணவர்களையும் கைது செய்த காவல் துறையினர் ,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அந்த மாணவர்கள், நான்குபேரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .
ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img