சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன்

 

 .

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான வீரபத்ர சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய எஃகு வளத்துறை முதலமைச்சராக இருந்தவர். முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வீரபத்ர சிங் மீதான புகார் குறித்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், வருமான வரி தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ போலீசார், வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிபிஐயின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்க இயக்கம் அண்மையில் வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீரபத்ர சிங், அவரது உறவினர்களுக்கு சொந்தமான இல்லங்களிலும் அமலாக்க இயக்கம் சோதனை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், டெல்லியில் உள்ள அமலாக்க இயக்கத்திலுள்ள விசாரணை அதிகாரிகள் முன்பு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வீரபத்ர சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories