தமிழகத்தில் ‘குடி மகன்களுக்கு’ 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்

Published:

‘குடி’மகன்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி வருகிற 7ம் தேதி சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக சென்னை,காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவினால் ஒரு பக்கம் கணவர், சகோதரர்களை பெண்கள் இழந்து வருகின்றனர். இப்போது மாணவர்களும் களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பொது மக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு மது சிகரட் விற்பனைக்கு தடை விதிக்க கோறி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசாங்கம் பொது மக்கள் நலன் மீது அக்கறையின்றி செயல்படுவதாகவே பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ‘குடி’மகன்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையில்சரக்கு கோரி வருகிற 7ம் தேதி சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அறிவித்துள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img