செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

tamilisai protest - 2026
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, 19 பேரை போலீஸ் கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க கோரி, ஆலங்குளத்தில் பாஜக் மாநில தலைவர் தமிழிசை தலைமையில் பாஜக-வினர் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, கல்லெறியப் பட்டு அதனால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்துக்கள் அனைவரையும் உடனே விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்  தலைமையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கல்லெறிதலில் ஈடுபட்டதாக இந்து இளைஞர்கள் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும், இளைஞர்களை போலீஸார் கல்லூரிகளுக்குச் சென்று தேடியதாகவும், அதனால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்ததாகவும் இந்துக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதை அடுத்து,  இந்துக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்தும், கைது செய்யப் பட்ட இந்துக்களை உடனே விடுவிக்க வலையுறுத்தியும் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால், தமிழிசை ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி தமிழிசை ஆர்ப்பாட்டம் செய்வாரா என்று கேள்விகள் எழுந்தன. தமிழிசை செங்கோட்டைக்கு வரும் வழியில், நெல்லையிலேயே அவரைக் கைது செய்யவும் போலீஸார் தயாராக இருந்தனர்.

இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று மதியம் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பின்னர் ஆலங்குளம் வந்தார். அங்கே பாஜக., தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதை அடுத்து தமிழிசையை வரவேற்ற பாஜக., தொண்டர்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories