சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!

temple statues in chennai bussinessman - 2026

சென்னை: சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மீது பொன் மாணிக்க வேல் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் அரவிந்த்சாமி நடித்த “மின்சார கனவு” படத்தில் நடித்தவர். இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பது தொடர்பாக சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளன் தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பொன். மாணிக்கவேல் தலைமையில்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில் காட்சிப் படுத்தப் பட்டிருந்த 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், ரன்வீர்ஷா வீட்டில் இருந்து 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 22 தூண்களும் அடங்கும்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தற்காலிகமாக வைக்க உள்ளோம். இங்கு 12 உலோகம், 22 கல் தூண்கள், 56 கல்சிலைகள் என 82 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இங்கு இருக்கக் கூடிய சிலைகள் எல்லாமே தெய்வத்தின் சத்தியமாக இந்து ஆலயங்களில் வைக்கக் கூடிய சிலைகள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

temple statues in chennai bussinessman2 - 2026

இதன் பரிணாமங்கள் மிகவும் பெரியதாக உள்ளன. இன்னொன்று… இவை பழமையான சிலைகள் அல்ல, தொன்மையானவை. இவை அனைத்தும் கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

ஆனால் இவை எந்தக் கோவிலில் திருடப்பட்டவை என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்தச் சிலைகளை மியூசியத்தில் வைக்க இடமில்லை என்று அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.

எனவே சிலைகளை எங்கே கொண்டு செல்வது என்பது தெரியவில்லை. இதனால் திகைத்து நிற்கின்றோம். இந்தச் சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு மேலானது.

சிலைகளை பறிமுதல் செய்வதற்கான செலவினங்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. செலவு செய்த பணத்தை திரும்பக் கிடைப்பதில் ஒரு மாதம் மேல் ஆகிறது. கைப்பற்றப்பட்ட சிலைகளில் 75 சதவீதம் தீனதயாளன் விற்றுள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தற்போது கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு 5 லாரிகள் மூலம் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விற்பனை உரிமம் இல்லாதவரிடம் சிலைகளை வாங்கியுள்ளார் ரன்வீர்ஷா.  இவர் யார்-யாரிடம் சிலைகளை விற்றார் என்றும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

இந்த சோதனை தொடர்பாக எஸ்பி அசோக் நடராஜன் கூறியபோது, ரன்வீர் ஷா வீட்டில் 22 தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12 உலோகச் சிலைகள் உட்பட 89 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தமிழக கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை தொன்மையான சிலைகள். பலரிடம் இருந்து கைமாறி ரன்வீர் ஷாவிடம் வந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கலாம்.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories