ஜெயலலிதா அரசியல்வாதியா ? விளம்பரவாதியா ? : கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

Published:

 
 
தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் தமிழக பொதுமக்கள் கூறுவதாவது :-
 
அண்டை மாநிலமான கேரள அரசாங்கம் கூட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பால் தமிழமக்களின் மீது பெருத்த மனிதாபத்துடன் 60 இலவச பேருந்துககளை தமிழகத்தில் இயக்கிவருகிறது.
 
கேரள அரசாங்க இலவச பேருந்துகளில் கூட கேரள மாநில முதலமைச்சரின் படம் ஒட்டப்படவில்லை.மேலும் தமிழக அரசு பேருந்து பொது மக்களின் வரிபணத்தில் வாங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொந்த பணத்தில் அல்ல,
 
இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு பேருந்திலும், தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்ள என்ன உரிமையுள்ளது ? என்றும் ஜெயலலிதா அரசியல்வாதியா ? அல்லது விளம்பரவாதியா ? எனும் கேள்வியுடன் பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர் .
 

 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img