அடடே… தனியார் தொலைக்காட்சி செய்த திருவிளையாடல் தான் நடராஜை ஜெயலலிதா நீக்க காரணமா?

Published:

 
 
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக இன்று அறிவித்துள்ளார்.
 
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்பட்டது.
 
 
இந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜை அதிரடியாக நீக்க முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியே என்று அந்த தொலைக்காட்சியின் பெயருடன் சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவிவருகிறது.
 
வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கத்திற்கு இதுதான் காரணமா..?
 
அதிமுகவில் இருந்து காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் நீக்கத்தில் நடந்த குளறுபடி
 
டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன்.
 
அவர் தான் முன்னாள் டி ஜி பி ஆர் நடராஜ் என்று ஸ்க்ரோலர் போடுகிறது அந்த டிவி …. சரமாரியாக அரசாங்கத்தை விமர்சித்து அந்தக் குரல் பேசுகிறது ….
 
அந்த டிவி போன்ற நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனம் மேற்கொள்ளும் செய்தி என்பதற்கு மதிப்பு கொடுத்து , அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் திரு. நடராஜ் அவர்கள் மீது அ தி மு க தலைமை நடவடிக்கை எடுக்கிறது ….
 
ஆனால் பின்னர் தான் தெரிய வருகிறது அது நடராஜ் குரல் இல்லை என்று … கமுக்கமாக ஒரு மன்னிப்புக் கடிதத்தை நட்ராஜுக்கு அனுப்பி வைக்கிறது அந்தடிவி நிறுவனம் ….
 
அவர் பட்ட அவமானத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது அந்த டிவி நிறுவனம் ?
 
டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன். தவறுதலாக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர்.
 
என்று வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img