தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி

Published:

krishnasamy dr - 2026

தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தாமிரபரணி புஷ்கர விழாவில் புனித நீராட வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை…

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரம் நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் நடைபெற்று வருகிறது. பன்னிரண்டு நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று கலந்து கொண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து போது.

தாமிரபரணி நதி தமிழ்நாட்டு அளவில் மட்டும் அறியப்பட்ட நிலையில் புஷ்கரணி விழாவின் மூலம் இந்தியா அளவில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்று என்று எண்ணும் வகையில் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது.

– என்று கூறியுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img