December 6, 2025, 1:48 AM
26 C
Chennai

பழைய நீராவி எஞ்சினை பார்த்து ரசிக்க வாய்ப்பு!

train engine - 2025

ஸ்ரீவைகுண்டம் : 1855 ஆம் உருவாக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் வண்டி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வந்துள்ளது. அதனை பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ரயில்கள் அறிமுகம் செய்யப் பட்ட புதிதில், பழைமையான நீராவி எஞ்சின்களைக் கொண்டே ரயில்கள் இயக்கப் பட்டன. நிலக்கரி மூலம் இயங்கும் அந்த இஞ்சின்களில் வரும் சத்தம் குழந்தைகளைப் பெரிந்தும் கவர்ந்திருந்தது. ரயில் வண்டி என்றாலே கூ சிக்கு புக்கு சிக்கு புக்கு என்று பாட்டுப் பாடி குழந்தைகள் விளையாடி மகிழ்வது, இந்த நீராவி இஞ்சினின் சத்தத்தாலேதான்!

அந்த நீராவி எஞ்சின்கள் எப்படி இயங்கின என்பது குறித்தும் இந்த இஞ்சினை வந்து பார்வையிடும் இன்றைய தலைமுறை சிறுவர்கள், குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிட்சன், தாம்சன், ஹெவிட்சன் ஆகியோர் 1855-இல் உருவாக்கிய நீராவி இரயில் எஞ்சின் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு நீராவி தொடர்வண்டி இங்கு 55 ஆண்டுகள் தனது பணியை ஆற்றியது. இந்த தொடர் வண்டியில்தான் எலிசபெத் மகாராணி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீராவி தொடர் வண்டியில் இந்திய மக்களும் பயணம் செய்தனர். 1909-ஆம் ஆண்டு இந்த இந்த நீராவி எஞ்சின் தனது சேவையை நிறுத்தி ஜமால்பூர் மற்றும் ஹெளராவில் உள்ள பனிமனைக்கு அனுப்பப்பட்டு கண்காட்சிப் பொருளானது.

101 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்கை அழிவினாலும், அதிக அளவு சிதிலமடைந்ததினாலும் தனதுதகுதியை இந்த நீராவிஎஞ்சின் இழந்தது. பின்னர் இந்த நீராவி எஞ்சின் 2010-ஆம் ஆண்டு சென்னைக்குஅருகிலுள்ள பெரம்பூர் பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகு தேவதைக்கு உலகிலேயே பழமையான நீராவி எஞ்சின் என்ற சாதனை பெயர் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல கின்னஸ் சாதனையும் இந்த நீராவி எஞ்சின் பெற்றுள்ளது. இந்த சாதனை இயந்திரத்தின் மீள் ஓட்டம் 2010 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரலுக்கும்-ஆவடிக்கும் இடையே இயக்கப்பட்டது.

அதன் பின்னர் புதுச்சேரியிலும் இயக்கப்பட்டது.தற்போது தென் பாண்டிசீமையிலுள்ள மக்களுக்கு விருந்து படைக்க திருச்செந்தூர் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ.தொலைவுக்கு தன்னுடைய பாரம்பரிய மகிமையை காட்டவருகிறது. அதன் வெள்ளோட்டமாகத்தான் இன்று (09.11.2018) மதியம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  இதனை இரயில் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். எந்தெந்த நாள்களில் எந்தெந்த நேரங்களில் இயக்கப்படும்  என்பதை தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories