December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

கார்த்திகை முதல் சோமவாரம்: குற்றாலம் அருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி; வழிபாடு!

courtallam temple somavara - 2025

குற்றாலம்: இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திருக்குற்றாலம் அருவியில் நீராடி பூஜை செய்வதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதல் காலை 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கார்த்திகை மாதம் முதல் சோம விரதத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலை முதலே குற்றால அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிப்பாடு.நடத்தி வருகின்றனர். அருவியில் நீராடி, அரச மரம் சுற்றி வந்து நாக வழிபாடும் சோமநாதர் வழிபாடும் செய்வது தொன்றுதொட்டு கடைபிடிக்கப் பட்டு வரும் மரபு. இதை முன்னிட்டு, கார்த்திகை சோம வாரமான திங்கள் கிழமைகளில், அருவிகளில் அதிகாலை முதல் 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப் படுவர்.

குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கள் கிழமை முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அருவியில் புனித நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சோமவாரத்தில் கணவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டி பெண்கள் அதிகாலை வேளையில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் திருமாங்கல்ய பூஜை செய்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கள் கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் அதிகாலை 2 மணி முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடி, அருவிக்கரையிலுள்ள கன்னி விநாயகர் கோயில் மற்றும் செண்பக விநாயகர் கோயிலை 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

அதிகாலை1மணிக்கு மேல் காலை 9 மணி வரை பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தததால் ஆண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஆண்கள் பகுதியிலேயே பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு மேல் ஆண்கள் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல காலை 10.30 மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆண்கள் பகுதியில் பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் வரத்து சிறக்க இருப்பதால் இதனால் ஐயப்ப பக்தர்களும், சோமவாரத்திற்கு வந்த பெண்களும் மகிழ்ச்சியடைந்தனர்.காலை முதலே ஏராளமான போலீசார் குற்றாலநாதர் ஆலயம்,குற்றாலம் மெயினருவி,உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories