பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு

Published:

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு 

திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வர்த்த்கம் மிகுதியாக நடைபெறும் நகரமாகும் இங்குள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் இருந்து ,கோயமுத்தூர் ,திருப்பூர் சென்னை என தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா ,கர்நாடகா என பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து காய்கறிகள் செல்வது வழக்கம்  ,இங்குள்ள  காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு ஏற்பட்டுள்ளது ,ஆனால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் தேய்காய் கிலோவுக்கு ரூ.29 வரை விற்றது  திடீரென ரூ.17க்கு சரிந்தது. இதனால் தேங்காய் விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர். ஆனால் பொதுமக்கள் தேங்காய் விலை குறைவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது கடந்தமாதங்களில் மழையின் காரணமாக தேங்காய் வரத்து குறைவாக இருந்தது, இதனால் விலை ஏற்றம் காணப்பட்டிருந்தது, தற்போது தேங்காய் வரத்து வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் .,மேலும் கடந்த நாட்களில் வெண்டைக்காய்  கிலோ ரூ.30 வரை விற்றது தற்போது  கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து ரூ55க்கு விற்றபனையாகிறது. வழக்கமாக வரும் வெண்டைக்காய் வரத்து இன்றி மிக குறைவாக வந்ததால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர் .

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img