அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

India vs Ireland - 2026

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட அயர்லாந்துக்குச் சென்றுள்ளது. நேற்று டப்ளின் நகரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர், துவக்கம் முதலே நன்கு அடித்து விளையாடினர். ஸ்டூவர்ட் தாம்ப்சனின் 3வது ஓவரை ஒரு கை பார்த்தார் தவான். அதில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கினின் 4வது ஓவரை பதம் பார்த்தார் ரோஹித். அதில் 2 பவுண்டரி விளாசினார். அடுத்து மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பந்தை சிக்சருக்கு அடித்த தவான், 27 பந்தில் அரைசதம் கடந்தார். ரோகித்தும் தன் பங்குக்கு சிக்சர் அடித்து, அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது தவான் (74) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அபாரமாக ஆடி 97 ரன் சேர்த்திருந்த ரோஹித், 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித், தவான் இணை, முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டி–20 அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த இந்திய இணை என்ற வரிசையில் 2வது இடம் பிடித்தது. 2017ல் இலங்கைக்கு எதிராக 165 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளது ரோகித், லோகேஷ் ராகுல் இணை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories