அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

Published:

India vs Ireland - 2026

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட அயர்லாந்துக்குச் சென்றுள்ளது. நேற்று டப்ளின் நகரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர், துவக்கம் முதலே நன்கு அடித்து விளையாடினர். ஸ்டூவர்ட் தாம்ப்சனின் 3வது ஓவரை ஒரு கை பார்த்தார் தவான். அதில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கினின் 4வது ஓவரை பதம் பார்த்தார் ரோஹித். அதில் 2 பவுண்டரி விளாசினார். அடுத்து மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பந்தை சிக்சருக்கு அடித்த தவான், 27 பந்தில் அரைசதம் கடந்தார். ரோகித்தும் தன் பங்குக்கு சிக்சர் அடித்து, அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது தவான் (74) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அபாரமாக ஆடி 97 ரன் சேர்த்திருந்த ரோஹித், 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

ரோகித், தவான் இணை, முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டி–20 அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த இந்திய இணை என்ற வரிசையில் 2வது இடம் பிடித்தது. 2017ல் இலங்கைக்கு எதிராக 165 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளது ரோகித், லோகேஷ் ராகுல் இணை.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img