அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

India vs Ireland - 2026

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட அயர்லாந்துக்குச் சென்றுள்ளது. நேற்று டப்ளின் நகரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர், துவக்கம் முதலே நன்கு அடித்து விளையாடினர். ஸ்டூவர்ட் தாம்ப்சனின் 3வது ஓவரை ஒரு கை பார்த்தார் தவான். அதில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கினின் 4வது ஓவரை பதம் பார்த்தார் ரோஹித். அதில் 2 பவுண்டரி விளாசினார். அடுத்து மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பந்தை சிக்சருக்கு அடித்த தவான், 27 பந்தில் அரைசதம் கடந்தார். ரோகித்தும் தன் பங்குக்கு சிக்சர் அடித்து, அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது தவான் (74) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அபாரமாக ஆடி 97 ரன் சேர்த்திருந்த ரோஹித், 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித், தவான் இணை, முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டி–20 அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த இந்திய இணை என்ற வரிசையில் 2வது இடம் பிடித்தது. 2017ல் இலங்கைக்கு எதிராக 165 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளது ரோகித், லோகேஷ் ராகுல் இணை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories