டெங்கு காய்ச்சலை பரவவிடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசாங்கம்

Published:

 
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளது சத்துணவு கூட தெருவில் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .
மேற்படி தெருவின் அருகிலேயே மாங்குடி பஞ்சாயத்தின் தலைவராக இருந்து வரும் செல்வரத்தினமும் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் செல்வரத்தினத்தின் உறவினரும், அதே மாங்குடி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான சமுத்திரம் என்பவரும் மேற்சொன்ன தெருவின் அருகிலேயே சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
செல்வரத்தினம் மற்றும் சமுத்திரம் ஆகிய இருவருக்கும் முன்பகை இருந்து வருவதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
 
முன்பகை காரணமாக பஞ்சாயத்து தலைவர் செல்வரத்தினம் அந்த தெரு முழுவதும் ஆங்காங்கே பள்ளத்தை தோண்டி சாக்கடை நீரைத் தேங்க விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அவர் அப்பகுதியில் தேங்கும் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்த செல்லும் சுகாதார ஊழியர்களை தடுத்து அதை அப்புறப்படுத்த விடாமலும் தடுத்து வருவதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
அதன் காரணமாக மாங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது என கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வரும் மருத்துவ ஊழியர்களிடம் அவர் தகறாறு செய்து திருப்பி அனுப்பி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சிறு குழந்தைகள், மாரிமுத்து என்பவரின் மகன் ஜான் கென்னடி, சிங்கராஜ் என்பவரின் மகள் சோனியா, கணேசன் என்பவரின் மகன் வெள்ளைமுத்து, மாரியப்பன் என்பவரின் மகன் வெனில் ஆகிய நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இன்று இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தனராம்.
அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் மற்றும் அரசு மருத்துவரும் பணியில் இல்லாத காரணத்தால் அவர்கள் அனைவரையும் மருத்துவமனை செவிலியர் விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறதாம் .
மாங்குடி பஞ்சாயத்தின் தலைவர் செல்வரத்தினம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து பணத்தை சுருட்டி உள்ளதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
செல்வரத்தினம் செயலால் அவர்மீது வெறுப்படைந்த பொதுமக்கள் சிலரால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி செல்வரத்தினத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img