முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 9 மணிக்கு கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் இதர சம்பவங்கள் குறித்து இரு தரப்பினர் விவாதிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி சண்டை வரை சென்றது என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் பங்குபெற்ற அனல் பறக்கும் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி அந்த முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. எனவே விஜய், அஜித் ரசிகர்கள் இதை பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

