ஜன.20ல் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு தீவிரம்

Published:

ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 20ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஜனவரி 20ஆம் தேதி ராமேசுவரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் தீவுக்கு பாம்பன் வழியாக வரும் வாகனங்களை வரும் ஜன.15 ஆம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் வைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.

கோயில் அருகே முக்கிய பிரமுகர்களின் கார்களை நிறுத்த 2 இடங்களில் நிறுத்தமும், 1000 வாகனங்களை நிறுத்தக் கூடிய வகையில் பொது நிறுத்தமும் தயார் நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலைச் சுற்றிலும் 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img