வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்கள் அவதி

Published:

 

புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய வங்கிகள், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த சரத்துகளை மீறி ஊழியர்களுக்கு எதிரான பணிமுறைகளை திணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகள் தொடர்ந்து 3 நாள்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img