சென்னை:
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என்றும், இந்த வருட பொங்கல் விழாவை மோடி பொங்கல் என்று கொண்டாடலாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நம்மிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் அரசின் குறிப்பை வெளியிட்டுள்ளது என்றார். மேலும், இதற்காக குரல் கொடுத்த, திமுக தலைவர் கருணாநிதி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால் தன்னை பதவி விலகக் கோரி ஊக்கம் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், இந்த வருடம் தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பாடுபட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனவே இந்த வருட பொங்கலை ”மோடி பொங்கல்” என்று கொண்டாட இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதை அடுத்து, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது டிவிட்டர் செய்திகள்:
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016
தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016
மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.@PrakashJavdekar அவர்களுக்கும், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி. (2/2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016
Union Minister @PrakashJavdekar called me now to give the good news that arrangements to conduct #Jallikattu in TN has been made. (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016
I thanked him over phone. I thank our PM Shri.@narendramodi fr facilitating this to happen. I thank everyone who supported #Jallikattu (2/2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016


