விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

Published:

தருமபுரி கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் அசோகன், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில், விஜயகாந்த் வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கினை எதிர்த்து, தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா ஸ்ரீபந்த் ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img